கேபிஆர் மினி மாரத்தான் போட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Senthilkumar Rajappan is the Founder Blogger of YourCoimbatore.com, He is…
போதைப் பொருள் இல்லா எதிர்காலத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் 2, 5 மற்றும் 8 கிமீ என மூன்று பிரிவுகளில் 8வது கேபிஆர் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டி கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி, கேபிஆர் கல்லூரி முகப்பு என மூன்று இடங்களில் தொடங்கி கேபிஆர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில் கேபிஆர் நிறுவனத்தின் 3000க்கும் அதிகமான பெண் பணியாளர்களும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதோடு முதலில் வந்த 100 பேருக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.
கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு தங்கராமன், இந்திய தடகள வீராங்கனை அபிநயா ராஜாராஜன் மற்றும் இந்திய ராணுவத்தை சார்ந்த தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர் கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய தலைவர் கே பி ராமசாமி அவர்கள், “போதைப் பொருள் இல்லாத சமூகம் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். இதுபோல் ஒன்றாக கூடி விழிப்புணர்வைப் பரப்பி ஊக்குவிப்பதன் மூலம் இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பர்” என்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் த சரவணன் பேசுகையில் “மாபெரும் அளவில் போதைப் பொருள் இல்லா எதிர்காலத்திற்கான இந்த விழிப்புணர்வு மாரத்தானை நடத்தியது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இளைஞர்கள் எவ்வாறு போதைப் பொருப் பயன்பாட்டிற்கு பழக்கமாகிறார்கள் என்பதைப் பற்றி விளக்கி அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு தங்கராமன் பேசினார்.
கல்லூரி செயலர் திருமதி காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் நீலகிரி என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் மாரத்தானின் ஒருபகுதியாக கணியூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.’
What's Your Reaction?
Senthilkumar Rajappan is the Founder Blogger of YourCoimbatore.com, He is a digital marketing strategist , a start up mentor and loves speaking on entrepreneurship. Loves blogging on auto, tech and books. Also has a personal website www.rsenthilkumar.com