Now Reading
கே பி ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாடிவயலில் முகாம்

கே பி ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாடிவயலில் முகாம்

kpr

கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் “தூய்மை இந்தியா திட்டத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் நிலையான வளர்ச்சிக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் கோயம்புத்தூரில் உள்ள சாடிவயலில் முகாமிட்டுள்ளனர்.

பல மாணவ மாணவிகள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டுள்ள இம்முகாமை கல்லூரியின் செயலர் முனைவர் மா இராமசாமி அவர்களும் முதல்வர் முனைவர் த சரவணன் அவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இதில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் கிராம வளர்ச்சிக்காக ஐந்து மின்விளக்குகளை வழங்கி உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top