Now Reading
கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்

கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்

இந்திய இயற்பியலாளர் சர் சி.வி ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்ததை குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் இந்த தேசிய அறிவியல் தினம் கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன், செயலாளர் முனைவர் ராமசாமி மற்றும் முதன்மை செயல் அதிகாரி நடராஜன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் விதத்திலும் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஹீரோ டெக் இந்தியா நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சதிஷ் குமார் மற்றும் ஜி .டி .நாயுடு மியூசியத்தின் “ஸ்டெம் லேப் “-ன் தலைவர் ராம்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவர்கள் அறிவியல் தொடர்பான தங்களுடைய கண்டுபிடிப்பு மாதிரிகளை காட்சி படுத்திருந்தனர். மேலும் அறிவியல் தொடர்பான ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தல் , வினாடி வினா போட்டிகளும் நடைபெற்றது. இறுதியில் சிறந்த மாதிரிகள் , கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் ‘விஞ்ஞானம் மனிதர்களின் வாழ்வை , சிறப்பானதாகும் , எளிமையானதாகவும் மாற்றியுள்ளது . அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அறிவியல் அடிப்படையானது’ என்றனர். முதலாம் ஆண்டு அறிவியல் மற்றும் மானுடவியல் துறை இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது .

What's Your Reaction?
Excited
2
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top